Saturday, July 30, 2016

சிரிப்பு தியானம்

ஓசோவின் – சிரிக்கும் புத்தர் தியானம்

சிரிக்கும் புத்தர் தியானம்
ஓசோ அறிமுகப்படுத்திய
விசேடமான தியான முறைகளில் ஒன்று.

அவரது பார்வையில்….
இந்த உலகை உணர்ச்சிமிக்கதாகவும்
விளையாட்டு நிறைந்ததாகவும் உருவாக்குவதே
நம் விருப்பம்.

சிரிப்புத்தான் ஆன்மிகத்தின் அடிப்படைத் தன்மை என்பதை
இந்த உலகுக்கு எடுத்துக் கூறவேண்டும்.

எங்களால் சிரிக்க முடியவில்லை எனில்
எங்களது வாழ்வில் அநேக விடயங்களை
நாம் இழந்துவிடுவோம்.

சிரிப்பு எங்களை கள்ளம் கபடம் அற்ற
குழந்தையாக்குகின்றது.

எங்களது சிரிப்பு
இந்த இயற்கையுடன் இணைந்துவிடுகின்றது.

ஆர்ப்பரிக்கும் கடலோடும் நட்ச்சத்திரங்களோடும்
அவைகளின் அமைதியோடும் இணைந்துவிடுகின்றது.

நாங்கள் சிரிப்பதன்
மூலம் இந்த உலகின் அறிவுள்ள
ஒரு பகுதியை தனியாக அமைக்கின்றோம்.

ஏனென்றால் அறிவுள்ளவர்கள் மட்டுமே சிரிக்கமுடியும்.

ஆதனால் தான் மிருகங்களால் சிரிக்க முடிவதில்லை.

அவைகளுக்கு அதிக அறிவு கிடையாது.
“எதையும் பெரிய விடயமாக (serious) எடுத்துக் கொள்ளவேண்டும்.
விளையாட்டாக (playfulness )எடுத்துக்கொள்ளக் கூடாது”
என நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.

ஏதையும் பெரிய விடயமாக (serious) எடுத்துக்கொள்வதால்
சமூகத்தில் மரியாதை கிடைக்கின்றது.

மரியாதைக்காக நாம் எதையும்
விளையாட்டாக எடுத்துக் கொள்வதில்லை.

எல்லாவற்றையும் பெரியவிடயமாக எடுப்பது
நம்மை நோயாளியாக்கிவிடும் என்பதை
கற்பிப்பவர்கள் மறந்துவிடுகின்றனர்.

நம்மிடம் சிரிக்கும் உணர்வு மங்கிப்போய்விட்டது.
மரணித்துவிட்டது. 
இல்லை என்றால் எங்களைச் சுற்றிலும் உள்ள
வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியான விடயங்கள் நிறையவே உள்ளன.

எங்களிடம் சிரிக்கும் உணர்வு இருந்தால்
கவலைப்படுவதற்கு நேரம் இல்லாமல்
முழுநேரமும் சிரித்துக் கொண்டே இருக்குமளவுக்கு
பல விடயங்கள் உள்ளன என்பது தெரிந்தால்
நாம் ஆச்சரியப்படுவோம்.

ஏதாவது ஒன்று எங்கேயாவது
சிரிக்கும் படி நடந்துகொண்டே இருக்கும்.

எனவே மனித வாழ்வில்
நாம் மறந்துவிட்ட சிரிப்பைக் கொண்டுவருவது தான்
நம் வேலை.

சிரிப்பை மற்ந்துவிட்டால்
நாம் பாடுவதை மறந்துவிடுவோம்
ஆடுவதை மறந்துவிடுவோம். 
அன்பை மறந்துவிடுவோம்.

சிரிப்பை மட்டும் நாம் மறக்கவில்லை
இதனுடன் சேர்ந்து வேறு பல விடயங்களையும் மறந்துவிட்டோம்.

சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
சிரிப்பது புனிதமானது.

மேலும் சிரிப்பைப் பற்றி ஓசோ கூறுகிறார்,
ஆன்மீக அனுபவங்களில்; மிகவும் முக்கியமானது சிரிப்பு,
ஒரு மனிதரால்
எதையும் அடி மனதில் அடக்கி வைக்காமல்
முழுமையாகவும் இதயபூர்வமாகவும் சிரிக்க முடியுமாயின்
அந்தக் கணத்தில் மிகப்பெரிய மாற்றம் நடைபெறலாம்
ஏனெனில் முழுமையான சிரிப்பு
(ego) துன்முனைப்பற்றது
இது தான் உண்மையை
மேய்ஞானத்தை அறிவதற்கான ஓரே வழி;.
உண்மையாகவும் முழுமையாகவும் சிரியுங்கள்.
சிரிக்கும் சந்தர்ப்பங்களை தவறவிடாதீர்கள்.
சிரிப்பு ஒரு வழிபாடு.

சிரிப்பில் பலவகை உண்டு. வழமையாக மற்றவர்களின் குறைகளை, தவறுகளை,முட்டாள் தனங்களை பார்த்து எண்ணி சிரிப்பும்.

இது கீழ்த்தரமான சிரிப்பு. மற்றவர்களின் செலவில் சிரிப்பது சாதாரணமான சிரிப்பு மட்டுமல்ல அசிங்கமானதுமாகும்.

இது வன்முறையானதும் அத்துமீறியதுமாகும்.
இது மற்றவறை நோகப்பண்ணுவதாகும். நும் அடி மனதில் பழிவாங்கும் உணர்வை இந்த சிரிப்பு கொண்டிருக்கும்.

இரண்டாவது சிரிப்பு நம்மைப் பார்த்து நாமே சிரிப்பது. இது பெறுமதியானது. 
இது பண்பானது. தன்னைப் பார்த்து சிரிக்கும் மனிதர் மதிக்கப்படவேண்டியவர்கள். இவர்கள் முதலாவமவர்களைவிட மேலானவர்கள். இவர்கள் வன்முறை, வெறுப்பு, அத்துமீறல் என்பவற்றைக் கடந்தவர்கள்.

மூன்றாவது சிரிப்பு பிரபஞ்ச சிரிப்பு. ஒரு சம்பவத்தைப் பார்த்:து முழுமையாக சிரிப்பது. ஏதிர்கால பலன் எதனையும் எதிர்பாராது சிரிப்பது.
ஆரம்பமில்லாத ஆரம்பம் இந்த சிரிப்பு.
முழு பிரபஞ்சமுமம் எந்த ஒரு நோக்கமுமின்றி
எந்த ஒரு குறித்த புள்ளியையும் நோக்கியல்லாது
முடிவற்ற பிரதேசத்தில் பயணிப்பது.
இதைப் பார்த்து சிரிப்பது. இதிலிருந்து சிரிப்பு உருவாகும்.
இதை உருவாக்க ஆரம்பத்தில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
இதை முடிக்கவும் இறுதியில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
அழகாக ஒழுங்காக பகுத்தறிவோடு பயணிக்கும் இந்த பிரபஞ்சம். 

இதைப் பார்ப்போமானால் சிரிப்பு தவிர்க்க முடியாதது.
இது ஆன்மிகச் சிரிப்பு.

இது மட்டுமின்றி சிரிப்பதனால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு மனதுக்கு ஆன்மாவுக்கு கிடைக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.

சிறந்த உடல் இயங்கு சக்தி நடைபெறுகின்றது. 

தசைகள் அமைதியடைகின்றன. 

மன அழுத்தம் கோவம் குறைகின்றது.

ஊயிர் ஆற்றலும் ஆனந்தமும் அதிகரிக்கின்றது.

இயற்கையின் இசை சிரிப்பு.

No comments:

Post a Comment