Thursday, September 1, 2016

அக்கு பஞ்சர் அறிவியல்

                      Acu puncter 

அக்குபஞ்சர் ஆரோக்கியம்

அக்குபஞ்சர் - உயிர் சக்தி ஓட்டம்

யின் -யாங்" - தத்துவம்

அக்குபஞ்சர் - ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று

உணவுக்குழாய்

வயிற்றில் பாதி வாயில்

வெளிப்புற உறுப்பு

வெளிப்புற உறுப்பு : "கண்"

நோய்க்காரணிகள்


       

    

   

   

   

     






                                                      

பாரம்பரிய அக்கு சிகிச்சை மையம் திண்டல்

அக்குபஞ்சர்

மருந்தில்லா மருத்துவமானஅக்குபஞ்சர் சிகிச்சை பக்கவிளைவில்லாத முழு ஆரோக்கியம்தரும் ஓர் அற்புதம். எளிமையானமுறையில் நாடிப்பரிசோதனைசெய்து நலம் தரும், அக்குபஞ்சர்சிகிச்சை, அக்கு பஞ்சர் புள்ளிகள்பற்றி அறிவோம். வருமுன்காப்போம், நலம்பெற வாழ்வோம்.

பிரபஞ்சம் மேக்ரோகாசம் -மனிதர் மைக்ரோகாசம்.

ஒரு நபர், தன் உணவு மற்றும்பழக்கவழக்கங்களில்எவ்வளவுதான் எச்சரிக்கையாகஇருந்தாலும்  அவ்வப்போது உடற்பிணிகளால்பாதிக்கப்படுவது ஏன்?

நாம் வாழும் இந்த பூமியின்பஞ்சபூதசக்திகளின்ஒத்திசைவான நிலைப்பாடு,அதாவது சுற்றுப்புற சூழல், பலகாரணங்களால் சமன்பாட்டினைஇழந்துவிடுவதுதான் காரணம்.நமது சுற்றுப்புற சூழ்நிலைக்கும்நமது ஆரோக்கியத்திற்கும்உள்ள  தொடர்பினை நாம்அறிவோம்.

பல்லாயிரம் ஆண்டுகளாகஒழுங்காக சூரியனைச் சுற்றிஇயங்கி வரும் நமது பூமியின்பஞ்சபூதசக்திகளின் சமன்பாடு அவ்வப்போது , காலத்தின்கட்டாயத்தால் பிரபஞ்சத்தில்ஏற்படும் மாற்றங்கள் காரணமாகசீர்குலைகின்றது  என்பதுமறுக்க  முடியாத உண்மை.

அதிக வெப்பம், அதிக மழை,அதிக குளிர், வறண்ட காற்றுஎன  சுற்றுப்புற சூழலில் ஏற்றதாழ்வுகள் - அதன் காரணமாக அமையும் இயற்கைநிகழ்வுகளால் பூமியின் பஞ்சபூதசக்திகளில் ஏற்படும் மாற்றங்கள்  - நமது உடலின் பஞ்சபூதசக்திகளில்  தாக்கத்தைஏற்படுத்துகின்றன.

பிரபஞ்சத்தில் எங்கோ நகரும்ஒரு வால் நட்சத்திரத்தின்அசைவு,   சூரியனில் ஏற்படும்வெப்ப சலனம் மற்றும் கரும் புள்ளிகள் ஆகியவற்றுக்குகாரணமாக அமைந்து, பூமியின்தட்ப வெட்ப   நிலைகளில்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

பூமியின் தட்ப வெட்பநிலைகளில் ஏற்படும்மாற்றங்கள்,  அண்டத்தின் ஓர்அங்கமாகிய  நமது உடலின்பஞ்சபூத சக்திகளின்சமன்பாட்டில்  இடையூறு செய்து,ஆரோக்கிய நிலைப்பாடுசீர்குலைய காரணமாகஅமைகின்றன.

தவிர, அனைத்துகிரகங்களிலிருந்து பூமியினைவந்தடையும்மின்காந்தப்புலங்கள், பூமிக்கும்அவைகளுக்குமானஇடைவெளியின்அளவைப்பொருத்து,பூமியினையும் அதில் வாழும்நம்மையும் நேரடியாகபாதிக்கின்றன. நமது பூமியின் துணைக்கிரகமான சந்திரனைநாம் சற்று கவனிப்போம்.அமாவாசை மற்றும்பௌர்ணமியின் போது, கடல் நீர்மட்டம் மற்றும்  அலைகளின்எழுச்சி ஆகியவற்றில் ஏற்படும்தாக்கங்களை நாம் அறிவோம்.அதே அமாவாசை மற்றும்பௌர்ணமியின் போது   நீர்சம்பந்தப்பட்ட தோல்நோயினால்பாதிப்படைந்தவர்கள் அதிகஉபாதையினை அனுபவிக்கநேரிடும். மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களில்பலரது ஆரோக்கிய பாதிப்பு சற்றுஉக்கிரமாகவே இருக்கக்கூடும்.

பிரபஞ்சம் (Galaxy) மேக்ரோகாசம்(Macrocosm) என்றால் பூமி (Earth)மைக்ரோகாசம் (Microcosm).  பூமிமேக்ரோகாசம்  என்றால் நாம் மைக்ரோகாசம். 

எனவே பிரபஞ்சமாகியமேக்ரோகாசத்தில் ஏற்படும் ஒருசிறிய மாற்றமும் பிரபஞ்சத்தின்மைக்ரோகாசமாகிய  நம்மை நேரடியாக பாதிக்கும் என்பதில்சந்தேகமே இல்லை.

இவ்வுலகம்  நீர்,  நிலம், நெருப்பு  ஆகாயம்,  காற்றுஎனும் பஞ்சபூத சக்திகளால்ஆக்கப்பட்டிருக்கிறது என்பதனைநாம்  அறிவோம். அச்சக்திகளில்  ஏற்படும் ஏற்றதாழ்வுகளை சமன் செய்யும்வகையிலான செயல்பாடுகளே, எரிமலை வெடித்து  அக்கினிக்குழம்பினை வெளியேற்றுதல்,  பூகம்பம், ஆழிப்பேரலை, கடும் வெயில் -மழை -  காற்று -  குளிர் - வெப்பம் -  வறட்சி போன்ற  நிகழ்வுகளாகும் என்பதையும்நாம் அறிவோம்.

 அதே வகையிலேயே, அண்டத்தின் ஓர் அங்கமாகியநமது பிண்டத்திலும் - அதாவதுநமது உடலிலும் பஞ்ச பூதசக்திகளில்  ஏற்படும்ஏற்றதாழ்வுகளினால் உண்டாகும்விளைவுகளை - வலி, வீக்கம்,காய்ச்சல் - என  நாம் நோயின்அறிகுறிகளாக உணருகிறோம்.

இத்தகைய பிரச்சனைகளைஆரம்பத்திலேயே கண்டறிந்து,பெரிதாக நோய்வாய்ப்பாடமல்தப்பித்துக்கொள்ளும் வகையில்  எளிய தீர்வு ஏதேனும் உண்டா?

உண்டு.  அதுதான் நமதுஉடலின் "தன்னைத்  தானேகுணப்படுத்திக்கொள்ளும் சக்தி" 

நமது உடலின் "தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்ளும்சக்தி" யின் மீது பலருக்கும்சிறிது சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.

எள்ளளவுகூட சந்தேகம்தேவையில்லை.

எவ்வாறு இயற்கை தன்னைதானே சரிசெய்துகொள்கிறதோ,அதேபோல் நமது  உடலும் தன்னைத் தானே "சரி செய்து" கொள்ள - இடைவிடாது 24x7செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

நாம் உயிரோடு இருக்கும்ஒவ்வொரு நொடியும், நமதுஉடலில்ஆரோக்கியத்தைஎப்போதும் நிலைநிறுத்தும்வகையில், ஒரு  நொடி கூடஇடைவெளி இல்லாதவாறு  சதாசர்வகாலமும் அற்புதமானஇத்திறன்செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

நம்முள் இயங்கும் பஞ்சபூதசக்திகள் தமக்குள் நிகழும்முரண்பாடுகளை தாமேசரிசெய்து கொள்ளும் தன்மைவாய்ந்தது. சில  சமயங்களில்,சரியான சரிவிகித உணவு,மற்றும் முறையான பழக்கவழக்கங்களை நாம்கைக்கொள்ளாதபோதும், மற்றும்சுற்றுப்புற சூழ்நிலையின்தாக்கத்தாலும்,  நமது உடலில்இயங்கிக்கொண்டிருக்கும் பஞ்சபூதங்களாகிய மரம்,நெருப்பு, நிலம்,  உலோகம், நீர்- ஆகியவற்றின் சக்திஓட்டத்தில்(flow of bio-electric energy;  acupuncture meridian )தடைகள் ஏற்படுகின்றன. 

இந்த சந்தர்ப்பங்களில் ஒருவரதுஉடலில் இயற்கையாகஅமைந்துள்ள "ஆற்றல் மிக்கஉயிர்சக்தி" (vital energy) பலவீனப்பட்டு, செயல்திறன்மிகவும்குறைந்திருக்குமேயனால்,அவரது உடல் சுயமாக போராடும்தன்மையினை  இழக்கின்றது.

ஒருவரது உடலில் சுயமாக தாமேஇயங்கி, சரிசெய்துகொள்ளமுடியாத இயலாத"பஞ்சபூதங்கள் சார்ந்த சக்திஓட்டத்தை",  அக்குபஞ்சர்தூண்டுதல்மூலம் சரிசெய்துஒருவரது உயிர்சக்தி ஓட்டத்தைசரியாக இயங்கச்செய்யமுடியும்.ஒருவரின்  "உயிர்  சக்தி" (vital energy) மிகவும் பாதிக்கப்பட்டிருக்காதவரையில் இதுசாத்தியமே.

ஒரு சிறந்த அக்குபஞ்சர்மருத்துவர், தம்மை நாடி வரும் ஒருவரின் உடலில்இயங்கிக்கொண்டிருக்கும்பஞ்சபூத சக்திகளின் தற்போதைய நிலையினைஅக்குபஞ்சர் நாடிப்பரிசோதனைமூலம் சோதிக்கிறார்.
மரம், நெருப்பு, நிலம்,உலோகம், நீர் - எனும் ஐந்துமூலகங்களின் செயல்பாடுகளைநடத்திவரும்  உறுப்புகளாகிய 

நுரையீரல்
பெருங்குடல்
இருதயம்
சிறுகுடல்
இருதய மேலுறை
மூவேப்ப மண்டலம்
இரைப்பை
மண்ணீரல்
கல்லீரல்
பித்தப்பை
சிறுநீரகம்
சிறுநீர்ப்பை

- ஆகியவற்றின் சக்தி ஓட்டத்தின்தன்மை நாடிப்பரிசோதனைமூலம் பரிசோதிக்கப்படுகிறது. 

நாடிப்பரிசோதனை மூலம்,பாதிக்கப்பட்ட மூலகத்தினைசோதித்து அறிந்து,பிரச்சனையை தெரிந்துகொள்கிறார் அக்குபஞ்சர்மருத்துவர். 

அந்தப்பிரச்சனை,  சம்பந்தப்பட்டமூலகத்தின் செயல்திறன்குறைவால் ஏற்பட்டதா? -அல்லது, அம்மூலகத்தின்தேவைக்கு  அதிகமானசெயல்பாட்டினால்  ஏற்பட்டதா? -என்பதை புரிந்து கொள்கிறார்.தேவைப்பட்டால் அதற்குகாரணமாக அமைந்த நிகழ்வுகளை, விசாரணை மூலம்அவர் அறிந்துகொள்கிறார்.

நாடிப்பரிசோதனையின்அடிப்படையில், அவருக்குஅக்குபஞ்சர் சிகிச்சைதருவதோடு மட்டுமல்லாமல்,பிரச்சனையின் மூல காரணத்தினை சரிசெய்யும்வகையில் ஆலோசனைகள்தரப்படுகிறது.  தொடர்ந்து நீடித்தஆரோக்கிய வாழ்க்கை அமைய, அதாவது ஒருவரின் உடலில்இயங்கிக்கொண்டிருக்கும்"பஞ்சபூதமூலகங்களின்இசைவான உயிர்சக்தி ஓட்டம்" தடையில்லாமல் இயங்கும்வகையில், மிக எளிதானமுறையில், அவர் கடைபிடிக்கவேண்டிய உணவு மற்றும் பழக்கவழக்கங்களைஆலோசனையாகச்சொல்லப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நபர்,  இழந்தஆரோக்கியத்தை மீண்டும்முழுமையாக அடைய, அவரது"உயிர்சக்தி ஓட்டம்" எந்தவகையிலும்  தளராத வகையில்,முறையான சரிவிகித உணவு,மற்றும் ஆரோக்கியமானபழக்கவழக்கங்களை தொடர்ந்து கைக்கொள்ளவேண்டும்  என்பதுமிக மிக அவசியம். 

எந்த அளவுக்கு  இயற்கையோடுஇணைந்து நமது உணவு மற்றும்பழக்க வழக்கங்களைகைக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்  என்பதுஉறுதி.

மற்ற துறையினைச் சார்ந்தமருத்துவர்கள் போல் அக்குபஞ்சர்மருத்துவர்களும் நிச்சயமாக - நீடித்த நல்ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த வழிகாட்டியாகஇருப்பார்கள்.

நமது உடலின் அற்புதமான இந்ததன்னைத்தானேபாதுகாத்துக்கொள்ளும் செயல்,ஒரு தொடர் போராட்டமாகவேநம்முள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இனி வரும் பதிவுகளில் அதனைநாம் பார்க்க இருக்கிறோம். 

எல்லாம் சரிதான் -நோய்வாய்ப்படாமலேயே நாம் தப்பித்துக்கொள்ள வாய்ப்புஇருக்கிறதா?

ஏன் இல்லை!?

ஆரோக்கியமான வாழ்க்கைக்குஅடிகோலும் கணக்கிலடங்காதஅற்புதமான வழிமுறைகளை, எண்ணிக்கையிலடங்காத சித்தர்களும், மகான்களும்ஆயிரக்கணக்கானவருடங்களுக்கு முன்பே -பண்பாடு, கலாச்சாரம் - எனஎளிய முறையில் பின்பற்றத்தக்கவாறுவாழ்க்கையோடு இணைந்தமுறையாக நமக்குத்தந்திருக்கிறார்கள். 

அற்புதமான அந்தவழிமுறைகளை  பின்பற்றுவோம்- 

 அக்குபஞ்சர் நாடிப்பரிசோதனை

பஞ்சபூதங்கள் : "மரம்" மூலகம்தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு,நிறம், சுவை

பஞ்சபூதங்கள் : "மரம்" மூலகம்தொடர்ச்சி   - வெளிப்புறஉறுப்பு, நிறம், சுவை -ஆகியவற்றை இப்பதிவில்பார்ப்போம்

வெளிப்புற உறுப்பு : "கண்"

எனக்கு நன்றாகநிணைவிருக்கிறது - எனதுசிறுவயதில், எனக்கு உடல் நலம்சரியில்லாத போது, என் தாயார்என்னை மருத்துவமனைக்குஅழைத்துச் சென்ற போது, என்னை  சற்று உற்றுப்பார்த்த மருத்துவர், சற்றேயோசித்தவராக எனது இருகண்களின் கீழ் இமைகளையும்ஒவ்வொன்றாககீழிழுத்துப்பார்த்து, உடனேயேசொன்னார் "பையன் உடம்பிலேரத்தமே இல்லையே!" என்று.

எவ்வளவு எளிதானபரிசோதனை! உடனடி report!!

நமது உடலில்  இரத்தத்தின்அளவு குறைந்திருக்குமேயனால்,கல்லீரலில், அவசரத்தேவைக்காகசேமித்து வைக்கப்படும்இரத்தத்தின் அளவும் அதேவிகிதத்தில் குறைந்து விடும். 

கண்களின் கீழிமையை சற்றுகீழிழுத்துப்பார்க்கும் போதுதெரியும் உட்பகுதியில் நாம்காணும் சிகப்பு நிறத்தின்அடர்த்தி,  உடலின் இரத்தஅளவினைக்காட்டும் "meter" ஆகவிளங்குகிறது.

அடர்ந்த சிகப்பு நிறம்,போதுமான இரத்தம் நமதுஉடலில் இருப்பதையும்,வெளிறிய சிகப்பு நிறம்  உடலில்இரத்தம் குறைவாகஇருப்பதையும் தெளிவாககாட்டுகிறது.

கண்ணின்வெண்விழிப்படலத்தில் தெரியும்மஞ்சள் நிறம், கல்லீரல்மஞ்சள்காமாலை நோயால்பாதிக்கப்பட்டிருப்பதைஉணர்த்துகிறது.

கண்ணில் எரிச்சல், மற்றும் நீர்வடிதல் ஆகியவை கல்லீரல்நச்சுப்பொருட்களால்பாதிக்கப்படுவதை அவ்வப்போதுநமக்கு உணர்த்தும் குறிகளாகும்.

மரம் மூலகத்தின் சுவை  : "புளிப்பு"

நமது உடலின்உள்ளுறுப்புகளுக்கும்சுவைகளுக்கும் நேரடித் தொடர்புஉள்ளதென்பதை நாம்அறிவோம்.  அந்த வகையில்"மரம்" மூலகத்தின் சுவைஇயல்பு  "புளிப்பு" ஆகும்.

நாம் எடுத்துக்கொள்ளும்உணவில் புளிப்புச்சுவைஅளவோடு இருக்க வேண்டும்.ஏறக்குறைய இருப்பின்  "மரம்"மூலகத்தின் உறுப்புகளானகல்லீரல் மற்றும் பித்தப்பைஆகியவற்றின் செயல்பாடுகள்பாதிக்கப்படுகின்றன.

அதிகப்படியாக புளிப்பு உணவைஎடுத்துக்கொள்ளும் ஒருவருக்கு,நெஞ்செரிச்சல் மற்றும்வயிற்றுக்கோளாறுகள்ஏற்படுவதோடு மட்டுமல்லாமல்,இரத்தத்தில் அமிலச்சுவைஅதிகரிப்பதின் காரணமாகஉடலின் அனைத்து இணைப்புபாகங்களிலும் வலி ஏற்பட மிகஅதிக வாய்ப்பு உள்ளது.

நீண்டநாளாக, உடலின்இணைப்பு பாகங்களில் மிகுந்தவலியினால் அவதிப்படுபவர்கள்,நிச்சயமாக  அதிகமாகபுளிப்புச்சுவை மிகுந்த உணவில்நாட்டமுள்ளவர்களாகஇருப்பார்கள். அவர்கள் தாம்எடுத்துக்கொள்ளும் உணவில்புளிப்பு சுவை அதிகம் சேராமல்கவனத்துடன்இருப்பார்களேயானால், நிச்சயமாக மருந்துகளின்உதவியின்றி, படிப்படியாகவலியிலிருந்து விடுபட அதிகவாய்ப்பு  உள்ளது.

மரம் மூலகத்தின் நிறம் : "பச்சை"

கல்லீரலானது, பித்தநீரினைபித்தப்பையில் சேமித்து வைத்துபயன் படுத்துகிறது.  பித்தநீரின்மிக முக்கியமான பணியாகியகொழுப்பு ஜீரணம் சரிவரநடைபெறாமல் தடைபட்டுப்போகும்நேரத்தில், பச்சை நிற"பித்தப்பை கற்கள்"பித்தப்பையில் உருவாகின்றன.

சிறுகுடலில் அடைப்புசம்பந்தப்பட்ட பிரச்சினைகள்உருவாகும்போதும், அல்லதுசிறுகுடலில் வைரஸ்  தாக்குதல்ஏதாவது ஏற்பட்டுள்ளபோதும்,பித்தநீரானது சிறுகுடலினுள்செல்ல வழியின்றி, மேலேறிஇரைப்பையை அடையும்போது,இரைப்பையானது பித்தநீரினைசகித்துக்கொள்ளும் திறன்இல்லாததால் பித்தநீரை,பச்சைநிற பித்தவாந்தியாகவெளியேற்றுகிறது.  

நாம் எடுத்துக்கொள்ளும்உணவில், குளோரபில் அல்லதுஇரும்புச்சத்து செறிவூட்டப்பட்டமருந்துகள் ஏதும் சேராதபோது,திடக்கழிவில் பச்சை நிறம்காணப்பட்டால், சிறுகுடல் மற்றும்பெருங்குடல் ஆகியவற்றின்இயல்புக்கு மாறான அதிவேகசெயல்பாட்டினை உணர்த்துகிறது

Labels: பஞ்ச பூதங்கள், புளிப்பு, மரம் மூலகம்

"மரம்" - மூலகம்: தொடர்ச்சி -உட்புற இணைஉறுப்பு :பித்தப்பை GALL BLADDER

பஞ்ச பூதங்கள் - ஐந்துமூலகங்கள் - FIVE ELEMENTS - தத்துவத்தில், கல்லீரல், மற்றும்பித்தப்பை  ஆகியவை, அவற்றின்செயல்பாடுகளைக்கொண்டு"மரம்" மூலகத்தின் உறுப்புகளாகபகுக்கப்பட்டுள்ளன

உட்புற இணை உறுப்பு :  பித்தப்பை  GALL BLADDER -அக்குபஞ்சர் குறியீடு "GB" 

கல்லீரலின் அடிப்பக்கத்தில்அமைந்துள்ள பித்தப்பையானதுசுமார் 50 முதல் 60 மில்லி லிட்டர்மட்டுமே  கொள்ளளவு உடையது.

கல்லீரலானது  பித்தநீரினைசுரந்து பித்தப்பையில்சேமிக்கிறது. பச்சை  நிறமானகாரத்தன்மையுடையதானபித்தநீர், நாளொன்றுக்கு சுமார்600 முதல் 1000 மில்லி லிட்டர் வரை  சுரக்கப்படுகிறது.

கல்லீரல் ஓரளவு தொடர்ச்சியாகபித்தநீரினை சுரந்துகொண்டிருந்தாலும்,பித்தப்பையானது, நாம் உணவுஎடுத்துக்கொண்டிருக்கும்போதோஅல்லது இரைப்பையில்அரைக்கப்பட்ட உணவுமுன்சிறுகுடலில்  நுழையும்போதோதான் பித்தநீரினைசிறுகுடலுக்குஅனுப்பித்தருகிறது.

சுமார் 50 அல்ல்து 60 மி.லி.கொள்ளளவே கொண்ட பித்தப்பை கல்லீரலிலிருந்துதொடர்ச்சியாக  பெறப்படும்சுமார் 600 முதல் 1000 மில்லிலிட்டர் வரையான பித்த நீரைசேமித்து வைத்து பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில்இருப்பதால், தான் பெறக்கூடியபித்தநீரின் அடர்த்தியை  10முதல் 15 மடங்கு  வரைஅதிகரித்து சேமித்து வைத்துதேவைப்படும்போது அதனைநீர்த்து பயன்படுத்துகிறது.

பித்தப்பையானது,  பித்தநீரைசிறுக்குடலுக்கு அனுப்பும்போது"மியூசின்" (musin) எனும் திரவச்சுரப்பினையும் சேர்த்துஅனுப்புகிறது. இந்த மியூசின்அரைக்கப்பட்ட  உணவுசிறுகுடலில் எளிதாக தடையின்றி நகர்ந்து செல்லஎண்ணைப்பசை (lubricant)போல செயல்படுகிறது.

பித்தநீரானது 89 சதவீகிதம்நீரும், மீதம் 11 சதவிகிதத்தில் பித்த உப்புக்கள், பித்தநிறமிகள், மியூசின்  போன்றகரிம (organic) பொருட்களும்,சோடியம், கால்சியம்,பொட்டாசியம், பை-கார்போனேட் போன்ற  கனிம (inorganic)திடப்பொருட்களும் கொண்டதாகஅமைகிறது.

 

பித்த உப்புக்கள், சிறுகுடலில்கொழுப்பு ஜீரணத்திற்கு மிகவும்இன்றியமையாததாகஅமைகிறது. 

பித்த உப்புக்கள், சிறுகுடலில்உருண்டைகளாக உருவாகும்கொழுப்பினை நுண்ணியதுகள்களாக உடைத்து கூழ்போன்று  திரவநிலைக்கு மாற்றி,சிறுகுடல் உறிஞ்சத்தக்கதாகமாற்றித்தருகின்றன.

சிறுகுடலின், peristatic movementஎனப்படும் சுருங்கி விரியும்தன்மையை ஊக்குவித்து, உணவுத்  திரவக்கூழின்சிறுகுடல் பயணத்தைஎளிதாக்குகின்றன. 

மேலும், பித்தநீரின்திரவத்தன்மையை தொடர்ந்துபாதுகாப்பதன் மூலம் பித்தப்பைகற்கள் உருவாகுவதை முற்றிலும்தவிர்க்கச் செய்கின்றன. 

சிதைக்கப்பட்ட இரத்தசிக்கப்பணுக்களிலிருந்துபெறப்பட்ட பிலிருபின் - bilirubin - மனித உடலின் முக்கியமான பித்த நிறமியாகின்றது. நமதுமல, நீர்க்  கழிவுகளில் தெரியும்வெளிர் மஞ்சள் நிறத்திற்குகாரணமாக அமைவது  இந்தபிலிருபின்தான்.

கல்லீரலின் செயல்திறனில்குறைபாடு ஏற்படுவதன்காரணமாக தோன்றும்நோய்களின் போது, பிலிருபின்இரத்ததில் அதிகமாக கலந்துவிடநேருவதால், மலம், சிறுநீர்மற்றும் கண்ணின்வெண்விழிப்படலம் ஆகியவற்றில்தோன்றும் மஞ்சள் நிறம்,நோய்த்தாக்கத்தை நமக்குஉணர்த்தும் வகையில்பிலிருபினின் செயல்பாடுமுக்கியத்துவம் வாய்ந்ததாகஅமைகிறது.
 

கொழுப்பினை ஜீரணிக்கஅத்தியாவசியமான பித்தநீரினைமுறையாக பயன்படுத்தும்வகையில் நமது உணவுப்பழக்கவழக்கங்கள்அமையவில்லையெனில்,பித்தப்பையில் அளவுக்குஅதிகமாக பித்தநீர்,சேர்ந்துவிடும் 

இறுகிய பித்தநீர், கற்களாகமாறி பித்தப்பையினைவெடித்துவிடச்செய்யும் அளவுக்குமோசமான நிலைக்கு நம்மைதள்ளிவிடும் என்பதை நாம்மறந்துவிடலாகாது.

 பித்தப்பை, மரம், மரம் மூலகம்

பஞ்ச பூதங்கள் : "மரம்" -மூலகம் - உள்ளுறுப்பு "கல்லீரல்"

பஞ்ச பூதங்கள் - ஐந்துமூலகங்கள் - FIVE ELEMENTS - தத்துவத்தில், கல்லீரல், மற்றும்பித்தப்பை ஆகியவை, அவற்றின்செயல்பாடுகளைக்கொண்டு"மரம்" மூலகத்தின் உறுப்புகளாகபகுக்கப்பட்டுள்ளன.

உட்புற உறுப்பு :  கல்லீரல் -LIVER - அக்குபஞ்சர் குறியீடு"LIV"

நமது உடலின் மிகப்பெரியசுரப்பியாக விளங்கும் -LIVER -எனப்படும் கல்லீரல், நமதுஉடலின் "இரசாயனத்தொழிற்சாலை" என்றுஅழைக்கப்படும் அளவுக்கு,நமக்கு அன்றாடம் தேவைப்படும்பலவித  உயிர்ச்சத்துக்களை நாம்உண்ணும் உணவிலிருந்துதயாரித்துத் தரும் முக்கியபணியினைச் செய்கிறது.

ஒரு மரமானது, எவ்விதம்நிலத்திலிருந்து சத்துக்களைஉறிஞ்சி தனது அனைத்துபாகங்களுக்கும் அனுப்புகிறதோ,அதேபோன்று, கல்லீரலானதுநாம் உண்ணும் உணவிலிருந்துபெறப்படும் அனைத்துசத்துக்களையும் நமது உடலின்அனைத்து பாகங்களும்பயன்படுத்தும் வகையில்தயாரித்து அனுப்பித்தருகிறது.தவிர, தான் வெட்டப்பட்டாலும்,மீண்டும் முழுமையாகவளர்ந்துவிடக்கூடியதன்மையுடையதாய்விளங்குவதால், கல்லீரல் மரம்மூலமாகஉருவகப்படுத்தப்பட்டுள்ளது.

கல்லீரல் ஆற்றும் அனைத்துபணிகளைப்பற்றியும் சொல்வதுஎன்பது அவ்வளவு எளிதானஒன்றல்ல. முக்கியமானபணிகளை மட்டும் சொல்லலாம்என்று யோசித்தால் எதைசொல்வது, எதை விடுவது என்றுபிரிக்கவும் முடியவில்லை.ஓரளவு சொல்லமுயற்சித்திருக்கிறேன்.

* நமது உடலின் அனைத்துபாகங்களிலிருந்து பெறப்படும்திரவ நிலையினைகண்காணித்து நிர்வகிக்கும்கல்லீரல், நமது உடலின்அனைத்து பாகங்களுடனும்நேரடியாகத் தொடர்புடையது.

* கார்போஹைடிரேட் எனப்படும்மாவுச்சத்து, மற்றும் புரோட்டீன்,கொழுப்பு ஆகியவற்றின்வளர்சிதை மாற்றம் - metabolism - கல்லீரலில் நடக்கிறது.

* கொழுப்பினைஜீரணிக்கச்செய்யும்பித்தநீரினைச் சுரந்து,பித்தப்பையில் சேமிக்கிறது.

* மாசுபட்ட உணவு மற்றும் நீர்,நோய்க்கிருமிகள், போதை தரும்மருந்துகள் மற்றும் மது -இவற்றினால்  இரத்தத்தில்சேரும் அனைத்துநச்சுப்பொருட்களையும் மற்றும்கழிவுகளையும் நீக்குகிறது.

* முக்கியமாக, பெருங்குடலில்நுண்ணுயிரிகளால் சேரக்கூடிய,உயிருக்கு உலை வைக்கக்கூடியஅளவுக்கு கொடியநச்சுப்பொருளான"அமோனியா"வை  யூரியாவாகமாற்றி சிறுநீரகம் வழியாகவெளியேற்றச் செய்கிறது.

* இரத்தச்சுற்றோட்டத்தின் போது,மொத்த இரத்தத்தில் பத்து முதல்பதினைந்து சதவிகிதம் வரைதன்னுள் எப்போதும் இருக்குமாறுவைத்துக்கொள்கிறது -அவசரகாலத் தேவைக்காக.

* சிறுகுடலிலிருந்து பெறப்படும்  - வைட்டமின், மற்றும்தாதுப்பொருள் சத்துக்களைசேகரித்து வைத்து, தேவைப்படும்போது வெளியிடுகிறது.

* இரத்தத்தில் குளுக்கோஸ்எனப்படும் சர்க்கரைச் சத்து சற்றுஅதிகமாக இருக்கும் பட்சத்தில்,அதனை கிளைகோஜனாகமாற்றி சேமித்து வைத்து,தேவைப்படும்போதுகுளுக்கோஸாக மாற்றிவெளியிடுகிறது.

*  இரத்தம் உறைதலைத்தடுக்கத் (anticoagulant)தேவையான ஹெபாரின் - Heparin - எனப்படும்காரணியினை  சுரக்கிறது.

* இரத்த அழுத்தத்தை தொடர்ந்துசீராக வைத்திருக்கச் செய்கிறது.

* உடலின் electrolyte எனப்படும்"மின்பகு பொருள்" (ion) மற்றும்"நீர்" ஆகியவற்றின்சமநிலையினை பராமரிக்கிறது.

* இறந்துவிட்ட மற்றும்செயலற்றுப்போன இரத்தசிகப்பணுக்களில் உள்ள"ஹீமோகுளோபின்"களைசிதைத்து, மறுசுழற்சி முறையில்மீண்டும் இரத்த உற்பத்திக்குதேவையான இரும்புச்சத்தினைபிரித்து எலும்பு மஜ்ஜைக்குஅனுப்புவதோடு, அதில்பெறப்படும் கழிவினைவெளியேற்றவும் செய்கிறது.

இன்னும் பலவிதமானவளர்சிதைமாற்றச்செயல்பாடுகளை,கல்லீரலானது, நமது உடலில்ஆரோக்கியம் நிலைத்திருக்கும்வகையில் இடைவிடாதுசெயாலாற்றிக்கொண்டிருக்கிறது.

அமிர்தம் வேண்டி, பாற்கடலைகடையும்போது விளைந்தவிஷத்தின் தாக்குதலிலிருந்துதேவகணங்களை காக்குமுகமாக,அவ்விஷத்தை விழுங்க முற்பட்டசிவபெருமானைப்போல், நாம்உண்ணும் உணவு, மற்றும்நமக்கு ஏற்படும்கிருமித்தாக்குதல் ஆகியவற்றால்நமது இரத்தத்தில் கலந்துவிட்டகொடிய விஷத்தைதனக்குள்ளேயே வைத்துக்கொண்டு, தீங்கில்லாதஉயிர்ச்சத்துக்களை மட்டும்இரத்ததில் கலக்கச்செய்து தான்இருக்கும் உடலின் ஆரோக்கியம்ஒன்றே பிரதானம் என்றுசெயலாற்றும் கல்லீரலின்கடமையுணர்ச்சியைஎன்னென்பது!

"அளவுக்கு மிஞ்சினால்அமிர்தமும் நஞ்சு"

தெரிந்தோ, தெரியாமலோ நாம்நமது கல்லீரலின்ஆரோக்கியத்தை பாதிக்கும்வகையில் கைக்கொண்டிருக்கும்பழக்க வழக்கங்களிலிருந்துவிடுபடுவோம்.

பஞ்சபூதங்களின்உள்ளுறுப்புகளும் அவற்றின்கழிவுகளும்

ஒரு நபரின் உடலில்,  பஞ்சபூதமூலகங்களின் தற்போதையநிலைப்பாடு  எந்த அளவில்இருக்கிறது என்று நாம்நாடிப்பரிசோதனை மூலம்எளிதாக அறிந்து கொள்ளலாம்.எனினும் அதை  உறுதிப்படுத்தும்வகையில், கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான ஒன்று -கழிவு நீக்க செயல்பாடு. 

ஒவ்வொரு மூலகத்தின்உள்ளுறுப்பின் செயல்பாடும்,அந்தந்த உறுப்பின் கழிவுவெளியேற்றத்தினால்  எளிதாக உணரப்படுகிறது. ஆரோக்கியநிலையில், ஒரு உறுப்பின்கழிவின் தன்மை, மற்றும்அளவு  அதன் இயல்பான நிலையில் அமைந்திருக்கும்.உள்ளுறுப்பின் ஆரோக்கியத்தில்பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,கழிவுகள் வெளியேறுவதில்இயல்பு நிலையில் மாற்றம்நிகழ்கிறது.

அக்குபஞ்சர் தத்துவத்தில்,பஞ்சபூதங்களின் உள்ளுறுப்புகள்அனைத்திற்குமான கழிவுகள்நாம் எளிதில்அவதானிக்கக்கூடிய வகையில்திரவ நிலையில்அமைந்துள்ளன. அந்தவகையில், "நிலம்" மூலகத்தின்உள்ளுறுப்பான  மண்ணீரலின்கழிவுத்திரவம் எச்சில் எனப்படும்"உமிழ்நீர்" ஆகும்.

நிலம் மூலகத்தின் உறுப்புகளானஇரைப்பை மற்றும் மண்ணீரலின்செயல்திறனில் பாதிப்பு ஏற்படும் வேளையில், அதன்வெளியுறுப்பான வாய் அல்லது உதட்டில், உமிழ்நீரானது உடனேசுட்டிக்காட்டுகிறது.

அடிக்கடி வாய் உலர்ந்து விடுதல்,அல்லது எப்போதும் அதிகஉமிழ்நீர் சுரந்து கொண்டிருத்தல்- நிலம்  மூலகத்தில் ஏற்பட்டுள்ளபிரச்சினையினைக் குறிக்கிறது.

பஞ்சபூதங்களின்உள்ளுறுப்புகளும் அவற்றின்கழிவுகளும் பின்வருமாறு :

பஞ்சபூதங்கள் "நிலம்" மூலகம் -தொடர்ச்சி : மன உணர்ச்சி - "கவலை"

நமது உடலின் உள்ளுறுப்புகளின்இயக்கம் நேரடியாக நமதுகட்டுப்பாட்டுக்குள் இல்லை.

 

மூளையானது, நரம்பு மண்டலம்வழியாக உடல் உள்ளுறுப்புகளின்செயல்பாட்டினை தனதுகட்டுக்குள் வைத்திருக்கிறது.நமது உள்ளுறுப்புகள் யாவும்,என்னதான் தன்னாட்சிபெற்றிருந்தாலும், எந்த ஒருசெயலிலும் இறங்குமுன்,மூளையின் கட்டளைக்காககாத்திருக்கிறது.

 

உள்ளுறுப்புகளின் சீரானஇயக்கத்திற்கு, நமது உடலில்உள்ள நாளமுள்ள மற்றும்நாளமில்லா சுரப்பிகளிலிருந்துசுரக்கப்படும்  "ஹார்மோன்"எனப்படும் "உடல் உறுப்புக்களைஉசுப்பி விடும் இரத்தத்தில்இருக்கிற உட் சுரப்பு நீர்"அடிப்படை காரணமாகஅமைகின்றது. இதனைசுருக்கமாக "இயக்கு நீர் / சுரப்புநீர் " எனலாம். இத்தகைய"சுரப்பு நீர்" வகைகள் யாவும்உடலின் தேவைக்கேற்ப,மூளையின் கட்டளைப்படி,அந்தந்த உறுப்புகளிலும்,இரத்தத்திலும்சுரக்கப்படுகின்றன.

 

"நிலம்" மூலகத்தின்உறுப்புகளில் ஒன்றாகியஇரைப்பையில், உணவு ஜீரணம்நடைபெறும் விதத்தை நாம்ஏற்கெனவே "உணவு ஜீரணத்தில்உமிழ்நீரின் மகத்துவம்"பதிவினில் பார்த்தோம். நாவில்படும் சுவை, நாசியில் ஏறும் மணம், இவைகளுக்கேற்பஇரைப்பையில் சுரக்கும்நொதியங்கள் ஜீரணத்தை நடத்தஉதவுகின்றன.

 

தவிர, உடல் இயக்கத்திற்குஅத்தியாவசியமான, "ஆற்றல்"அல்லது "சக்தி நிலையில்"குறைவு ஏற்படும்போது,மூளையின் ஹைபோதலாமாஸ்பகுதியின் தூண்டுதலால்,  "பசி"உணர்வினை ஏற்படுத்தும் "HUNGER HARMONE" எனப்படும் "க்ரெளின் " (Ghrelin) வயிற்றில் சுரக்கிறது.

 

வயிற்றில் நடக்கும் இவ்வளவுநிகழ்ச்சிகளும் -  மூளையானது,மிக இயல்பாக, அதாவது, அதன்"நியூரோ டிரான்ஸ்மீட்டர்கள்"எனப்படும் "மின் அலைகடத்தி"களின் செயல்பாட்டிற்குஎந்த ஒரு  இடையூறும்  இல்லாத  பட்சத்தில் - செவ்வனேநடத்தித் தரும்.

 

நியூரோ டிரான்ஸ்மீட்டர்களுக்குஇடையிலான "இரசாயனசமிக்ஞைகள்" - CHEMICAL SIGNALS- சுதி விலகாத  தாள-லயத்துடன் நடக்கும்போது,மூளைக்கும்உள்ளுறுப்புகளுக்குமானதொடர்பில் பாதிப்பு  இல்லை.அவ்வேளையில் சுரக்கப்படும்  "செரோடோனின்" - SEROTONIN -எனும் மூளையின் சுரப்பானது,பசி உணர்வினைமுறைப்படுத்துகிறது.  மேலும் -உடல் சூட்டினை சம நிலையில்வைத்திருத்தல், "MOOD"எனப்படும் மன நிலையினை சீராக வைத்திருத்தல்,தேவைப்படும் தூக்கத்தை தரும்வகையில் மன அமைதி தருதல்,மற்றும் வலி  நிவாரணம்தருதல்  - போன்றவையும்  "செரடோனின்" துணை புரியும்முக்கிய  பணிகள் தான்.

 

ஒருவேளை, ஒரு நபர், நடந்துமுடிந்த வருந்தத்தக்க ஒருநிகழ்ச்சியைப்பற்றியும், அதன்விளைவாக, வருங்காலத்தில்"என்ன நடந்துவிடுமோ?" என்றுதொடர்ந்து"கவலை"ப்பட்டுக்கொண்டிருந்தால்விளைவு என்ன ஆகும்?விரைவில் அவரது நிலைமைகவலைக்கிடமாகிவிடும்.அதாவது, நியூரோடிரான்ஸ்மீட்டர்களுக்குஇடையிலான தொடர்பில்துண்டிப்பு ஏற்பட்டு,செரோடோனின் சுரப்புதடைபடுகிறது. செரோடோனின்சுரப்பு தடைபடுவதனால் பசிஉணர்வு அதிகமாகவோ அல்லதுகுறையவோ செய்யலாம்.அதாவது பசிமுறைபடுத்தப்படமாட்டாது.அதனால்,  இரைப்பை, மண்ணீரல் மற்றும் கணையம்ஆகியவற்றின் செயல்பாடுகள்தடைபடும். விளைவுஆரோக்கியக்குறைவு.மண்ணீரலின் குறைபாட்டினால்,இரத்தசோகை மற்றும்நோயெதிர்ப்பு சக்தி குறைவு,மேலும் கணையத்தின்கவனக்குறைவால் இன்சுலின்சரிவரச் சுரக்காததால் நீரழிவு எனும் சர்க்கரை நோய் கூடஉருவாகலாம்.

 

அதிகமாக, எந்நேரமும்கவலைப்படும் ஒருவரது நிலம்மூலகத்தின் செயல்திறன்குறைந்து, அதனால் ஆரோக்கியம் கெடும் - என்பதுமட்டுமல்லாமல் - முறையற்றஉணவுப் பழக்கவழக்கங்களினால்அவரது நிலம் மூலகத்தின்செயல்திறன் குறைந்து அதன்விளைவாக,  அவருக்கு தேவைஇல்லாமல் அடிக்கடி கவலைஉணர்வு தோன்றவும் செய்யும்எனபதை நாம் மறுக்க இயலாது.

 

இவ்வளவு விஞ்ஞானவிளக்கங்கள் எதற்கு?அதையெல்லாம்விட்டுவிடுங்கள். மறந்துவிடுங்கள்.“நினைப்புதான் பிழைப்பைகெடுக்கும்" என்ற நமதுமுன்னோர் சொல்லிவைத்திருக்கும் வார்த்தைகளின்அர்த்தத்தை சற்றுயோசித்துப்பாருங்கள். 

 

நீங்கள் எதெற்கெடுத்தாலும்அதிகமாக கவலைப்படுகிறவரா?

 

குறைந்தபட்ச கவலைதேவைதான். இல்லையென்றால்வாழ்க்கையை வழி நடத்துவதுஎப்படி? ஓரளவுக்கு,  அடுத்ததாகசெய்ய வேண்டியவற்றுக்கானதிட்டமிடுதல் இருந்தால் போதும்.கூடவே கொஞ்சம் தைரியத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். அதிககவலையினைத் தவிர்த்துவிடுங்கள். இந்த நாளின் அடுத்த வேளைஉணவைப்பற்றிய கவலை மட்டும்இருக்கட்டும். இன்னும் ஒருமாதம்கழித்து ஏதோ ஒருநாள் எடுத்துக்கொள்ளபோகும் மதியஉணவைப்பற்றிய கவலைஇப்போதே எதற்கு?

 

தேவையில்லாமல் அதிகமாககவலைப்படுகிறவர் எனில்,அருகில் உள்ள அக்குபஞ்சர்சிகிச்சையாளரிடம் ஆலோசனைபெறுங்கள். செரோடனின்சுரப்பினை  சரிப்படுத்தும்வகையில், ஓரிரண்டுஅக்குபஞ்சர் புள்ளிகளில் மட்டும்சிசிச்சை தந்து,  அவர் உங்கள் ஆரோக்கியம் மேம்பட உதவுவார்.

 

                 கவலையைப்பற்றிய கவலையை இனி விட்டுவிடுங்கள்.

பஞ்ச பூதங்கள் : "நிலம்" மூலகம் :தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு,நிறம், சுவை

"நிலம்" மூலகத்தின்  -வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை- ஆகியவற்றை இப்பதிவில்பார்ப்போம்

வெளிப்புற உறுப்பு : உதடு(வாய்).

அக்குபஞ்சர் மருத்துவத்தில்,நோயறிதல் பகுதியில்,முதலாவது செய்யப்படும்வெளிப்புற பரிசோதனை,"அகத்தின் அழகு  முகத்தில்தெரியும்" என்னும் பழமொழியின்அடிப்படையில்தான்.  பஞ்சமூலகங்களின் உள்ளுறுப்புகள்ஒவ்வொன்றுக்கும், கிட்டத்தட்டஅதன் வடிவத்தையொத்த உறுப்புஒன்று முகத்திலேயே படைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் "நிலம்" மூலகத்தின்வெளிப்புற உறுப்பாககணையத்தின் வடிவத்தையொத்த "உதடு"அமைந்துள்ளது.

அந்தந்த உள்ளுறுப்புகள்பாதிப்படைந்திருக்கும் பட்சத்தில்,அதன் வெளியுறுப்பில் அந்தபாதிப்பு  சுட்டிக்காட்டப்படுகிறது.மண்ணீரலின் அல்லதுகணையத்தின் செயல்திறன்மாறுபட்டிருக்கும்போது உதட்டிலும், உதட்டின்உட்புறத்திலும், உதட்டோரத்திலும்அதன் அறிகுறியாக புண்கள்தோன்றும்.

இரைப்பையில்அஜீரணப்பிரச்சினைகள் அல்லதுபுண்கள் இருக்கும் பட்சத்தில்உதடுகள் உலர்ந்து போகும். மேலும், உதட்டில் தோல் உரியஆரம்பிக்கும்; புண்கள் கூடஏற்படும். மண்ணீரல் குறைபாடுநோய்களின்  அறிகுறியாகவாயோரத்தில், உதடுகள்இணையும் இடத்தில் சிறுகொப்புளங்கள் அல்லது புண்கள் ஏற்படும். 

நிலம் மூலகத்தின் நிறம் :மஞ்சள்

"நிலம்"  மூலகத்தின் நிறம் "மஞ்சள் " ஆகும். ஒருவரதுஉடலில் நிலம் மூலகத்தின்செயல்திறன்  ஏறக்குறையஇருக்குமானால்,  அவரது முகம்,மஞ்சள் பூத்தாற்போல்ஆகிவிடுகிறது. ஜீரணக் கோளாறுகள், மற்றும்இரத்தக்குறைவு ஆகியபிரச்சினைகள் முகத்தில் மஞ்சள்நிறமாக வெளிப்படுகிறது. 

தவிர, கண்களில் தோன்றும்மஞ்சள் நிறம், கல்லீரலின்குறைபாட்டால் ஏற்படும் மஞ்சள்காமாலையின்  அறிகுறியாகஇருப்பினும், அதில் "நிலம்"மூலகத்தின் மண்ணீரலும் ஒருகாரணமாகிறது. மண்ணீரலில் இரத்த சிகப்பணுக்கள் மிக அதிகஅளவில் சிதைக்கப்பட்டு, அதன்காரணமாக ஏராளமாக உற்பத்தியாகும்  "பிலுரூபின்" - Bilurubin - என்னும் கல்லீரல்சுரக்கும் பித்தநீருக்கு  நிறம்தரும் நிறமியானது,இரத்தத்தில்  அதிகமாககலப்பதினால்,  அதன்அறிகுறியாக "மரம்" மூலகத்தின்வெளிப்புற உறுப்பான"கண்"ணில்,  "நிலம்"மூலகத்தின் "மஞ்சள்" நிறம்வெளிப்படுகிறது.

நிலம் மூலகத்தின்  சுவை :இனிப்பு, துவர்ப்பு 

"நிலம்" மூலகத்தின் சுவைஇயல்பு  "இனிப்பு" ஆகும்.எனினும் உடலில் இரத்தம்ஊறுவதற்கு மிக  அவசியமான  "துவர்ப்புச் சுவை" மண்ணீரலின் சிறப்பு சுவையாகச்செயல்படுகிறது 

பொதுவாக, நமது உடலின்திசுக்கள் சேதமடையநேரும்போது, அதனை மூளைநமக்கு "வலி"-யாக உணர்த்துகிறது.உள்ளுறுப்புகளின் நிலையும்அதுதான். ஆனால், திசுக்கள்சேதமடைவதற்கு  முன்னதாகவே,திசுக்களின் அடிப்படைகட்டமைப்பான "செல்"களின்இயக்கத்தில் குறைபாடு தோன்ற ஆரம்பித்திருக்கும் அல்லவா? சற்றே யோசிப்போம் -ஆரம்பகட்டத்திலேயே  அதனை நாம்  உணரமுடியுமானால்எவ்வளவு நல்லது? அதற்குவாய்ப்பு இருக்கிறதா?அக்குபஞ்சர் அறிவியலின்படிஅதற்கு பதில் "நிச்சயம்இருக்கிறது."

அது எப்படி?

ஒருவர், தான் உணவினைத்தேர்ந்தெடுக்கையில், அதன்சுவையில் நிச்சயமாக கவனம்கொள்கிறார். அவர்தேர்ந்தெடுக்கும் அந்த சுவை,அவரது உள்ளுறுப்புகளின் நிலையினை, மனதின்உணர்ச்சியாகவெளிப்படுத்துகிறது.

ஒருவர்,  அவரது உணவில் ஆறுசுவைகளும் அளவுடன்எடுத்துக்கொள்கிறார் என்றால்,அவரது  ஆரோக்கியம்முழுமையாக இருக்கிறது என்றுஅர்த்தம். இனிப்பு அனைவராலும்விரும்பி ஏற்க்கப்படும்  ஒருசுவை. ஓர் ஆரோக்கியமானநபர், இனிப்பு சுவை கொண்டஒரு பதார்த்தத்தை விரும்பி எடுத்துக்கொள்வார் - ஆனால்ஒரு நிலையில் "போதும்-திகட்டிவிட்டது" என்றபடிநிறுத்திக்கொள்வார். சுவைஉணர்ச்சியானது, - ஆரோக்கியநிலையில் - தேவைக்கு மட்டும் -குறிப்பிட்ட சுவையுடன் கூடிய உணவை அனுமதித்து, உடலின்ஆரோக்கியம் நிலைத்திருக்கச்செய்யும்.

ஒருவர் - "இனிப்பு எனக்குஅறவே பிடிக்காது"  என்றுஇனிப்பு சுவையை ஒதுக்கினாலும், அல்லது  " இனிப்பினை நிறையஎடுத்துக்கொள்வேன்" என்று மிக அதிகமாக இனிப்பைஉட்கொண்டாலும் - அவரது  "நிலம் மூலகம்"  முறையாகஇயங்கவில்லை என்பதனைஉணரலாம்.

தொடர்ந்து அக்குபஞ்சர் சிகிச்சைஎடுத்துக்கொள்ளும்ஒருவருடனான "கேள்வி - பதில்"பகுதியிலேயே,  அக்குபஞ்சர்சிகிச்சையாளர், உருவாகவிருக்கும் பிரச்சினையைஆரம்பத்திலேயே இனம் கண்டு கொண்டு, நாடிப்பரிசோதனைமூலம் அதை  உறுதி செய்து,சிகிச்சை தர முடியும். எனவேசுவை  உணர்ச்சி, அக்குபஞ்சர்நோயறிதல் பரிசோதனையில்முக்கியத்துவம் வாய்ந்தது என்றுசொல்லவும்  வேண்டுமா?

                  வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment