Wednesday, December 28, 2016

சிறிய - அரிய பயனுள்ள மருத்துவ குறிப்புகள்

சிறிய - அரிய பயனுள்ள மருத்துவ குறிப்புகள்

* காலையில் எழுந்தவுடன் உங்களை அறியாமல் நீங்கள் உங்கள் கைளை நீட்டுவீர்கள். முதுகை பின்புறம் வளைப்பீர்கள். கழுத்தினை இருபுறமும் திருப்புவீர்கள். இது நீங்கள் உணராமலேயே நீங்கள் உங்களுக்கு செய்து கொள்ளும் ‘ஸ்டிரெச்’ பயிற்சி யோகா. இதனை சில நிமிடங்கள் முறையான பயிற்சியாக செய்து விடுங்கள் . உங்கள் ரத்த ஓட்டத்தை சீராக்கும். ஜீரண சக்தி கூடும். முதுகு வலியினை நீக்கும்.

* காலை உணவுதான் பல ஆக்கப் பூர்வ செயல்களை உடலுக்கு கொடுப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. அநேகர்   எடை குறைய வேண்டும் என்ற கருத்தில் காலை உணவை தவிர்த்து விடுவார்கள். நேரமின்மை என்ற காரணத்தினை காட்டி காலை உணவினை தவிர்த்து விடுவார்கள். இவர்களை நீங்கள் பார்த்தால் அநேகர் எடை கூடியவர்களாக இருப்பார்கள். பழம், நார்சத்து நிறைந்த தானியம், கொழுப்பில்லாத பால் அல்லது தயிர் முட்டை போன்றவைகளை சேர்த்து காலை உணவாக உண்ணும்போது நீங்கள் அறியாமலேயே உங்கள் உடல் ஆரோக்கியம் காக்கப்படுகின்றது.

* பல் தேய்ப்பது என்பது இன்னமும் சிறுவர் முதல் பெரியவர் வரை பலருக்கு வகுப்பே எடுக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. அரை நிமிடம் கூட பல் தேய்க்காத அவசரம் பலருக்கு இருக்கின்றது. சிலர் கரடு முரடாக பல் தேய்ப்பதை போல் பல், தேய்த்து பல்லினையும், ஈறுகளையும் பாதிப்படைய செய்து விடுவார்கள். ‘ப்ளாஸ்’ எனப்படும் பல் இடைவெளிகளை சுத்தம் செய்யும் பழக்கம் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்பட வேண்டும் என்றே தோன்றுகின்றது. மருத்துவரைப் போல், பல் மருத்துவர் ஒருவரும் மிகவும் அவசியம்.

* மூளையினை சோம்பேரியாக விட்டு விடாதீர்கள். ‘செஸ்’, ‘பஸில்’ போன்றவை மூளையினை கூர்மையாக்குபவை. இப்படித்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. இடது கையால் பிரஷ் கொண்டு பல் துலங்குங்கள். கண்களை மூடி துணியின் நிறத்தினை கண்டுபிடிக்க முயலுங்கள். குறுக்கெழுத்து போட்டி முயற்சி செய்யுங்கள். சுறுசுறுப்பாய் இருப்பீர்கள்.

* தியாகம் என்பது மிகப்பெரிய பொருள் நிறைந்த வார்த்தை அது அனைவருக்கும் எளிதாய் வந்து விடாது. ஆகவே நான் என் குடும்பத்திற்காக தியாகம் செய்தேன். ஆயினும் யாரும் என்னை மதிக்கவில்லை என்று உங்களை நீங்களே வருத்திக் கொள்ளாதீர்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவே செய்யுங்கள்.

* பிரார்த்தனை செய்பவர்கள், கடவுளை வேண்டுபவர்கள் நோய் வாய்பட்டால் எளிதில் வெளிவந்து விடுகின்றார்கள் என ஆய்வு கூறுகின்றன. அநேகருக்கு பிடித்த தெய்வம் இருக்கும். பிரார்த்தனை செய்யுங்கள். பேசுங்கள் வேண்டுங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவரா? தவறில்லை, உங்கள் ஆன்மாவோடு உங்கள் மனதோடு, உங்களோடு பேசுங்கள், தேவைகளைக் கேளுங்கள், உடல் ஆரோக்கியம் நிலைக்கும்.

* தினமும் கொழுப்பில்லாத பால், தயிர் உங்கள் உணவில் இடம் பெறட்டும். உங்களது கால்ஷியம் தேவையினை மருத்துவர் ஆலோசனைப்படி மாத்திரையாக எடுத்துக் கொள்ளுங்கள்.

* 30 வயதிற்கு மேல் எலும்பின் அடர்த்தி குறைய வாய்ப்புண்டு என்பதனை நன்கு உணருங்கள்.
* புகை பிடிப்பதனை உறுதியாய் நிறுத்துங்கள்.
* புகை பிடிப்பவரிடமிருந்து தள்ளி இருங்கள்.
* ஒரு கிரீன் டீ நாள் ஒன்று எடுத்துக் கொள்ளலாமே.

* மிளகு, பட்டை, வெங்காயம், பூண்டு, வெங்காயத்தாள் இவற்றினை முடிந்தவரை அடுப்பில் சமைக்காது எடுத்துக் கொள்வது மிக நல்ல பலனை அளிக்கும்.

* தக்காளியில் உள்ள லைகோபேன் புற்று நோயையும் எதிர்க்கும் சக்தி படைத்தது. வைட்டமின் ‘சி’ நிறைந்தது. சலட் உணவில் அன்றாடம் - ஒரு - இரண்டு தக்காளியினை முடிந்தவரை சமைக்காத உணவாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

* தக்காளியும், ஆப்பிளும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களை தடுக்க வல்லது.

* நார் சத்து மிகுந்த தானியம், கொட்டைவகைகள், வாழைப்பழம் இவை மூளையில் செரடோனின் சுரக்கச் செய்யும். செரடோனினே ஒருவரை நல்ல ஆக்க உணர்வாக இருக்க செய்யும்.

* வைட்டமின் ‘ஏ’ சத்து நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் முக்கியமானது. பால் சார்ந்த பொருட்கள், பச்சை, மஞ்சள் காய்கறிகள், பப்பாயா, மாம்பழம் இவைகள் உணவில் சேர வேண்டும் என்பதனை குறிப்பாக இல்லத்தரசிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

* சுத்தமான நீர் அவசியம். அதற்காக மிக அதிகமான நீர் குடிப்பதும் ஆபத்தினை விளைவிக்கும்.

* தினமும் நடக்கவும். அரை மணி நேரமாவது நடக்க வேண்டும். தினமும் சில நிமிடங்கள் நன்கு வேகமாக நடக்க வேண்டும்.

* உங்கள் ஹார்மோன்களின் செயல்பாட்டு திறனை 25 வயதிற்குப் பிறகு முறையான பரிசோதனை மூலம் அறிவது உங்களை வெகுவாய் காப்பாற்றும்.

* வெயிலில் இருந்து சருமத்தினை பாதுகாக்கும் கிரீம் அவசியம் தடவுங்கள்.

* சந்தோஷமா? சிரித்து விடுங்கள், மன வருத்தமா? அழுது விடுங்கள். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியினை காக்கும்.

* கொதிக்க கொதிக்க நீரினை தலையில், உடலில் ஊற்றி குளிக்காதீர்கள். சிறு குழந்தைகளை இவ்வாறு செய்யும் வழக்கம் இன்னமும் இருக்கின்றது. அலற, அலற குழந்தைகளை இப்படி குளிக்க வைப்பது அக்குழந்தைகளுக்கு கடும் தீமைகளை விளைவிக்கும் என்பதனை அறியுங்கள்.

* ‘ரிலாக்ஸ்’- உடலை கடுமையான ஸ்டிரெஸ் கொண்டு தாக்காதீர் உங்களுக்கு பிடித்த வகையில் உங்களை ‘ரிலாக்ஸ்’ செய்து கொள்ளுங்கள்.

* ‘டயர்டாக்‘ சோர்வாக உணர்கின்றீர்களா? சற்று உடற்பயிற்சி செய்து பாருங்கள். புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

* இன்றைய இளம் தாய்மார்கள் சிறு குழந்தைகளை வளர்க்கும் காலத்தில் மிகவும் மன உளைச்சல் அடைந்து விடுகின்றனர். காரணம் கூட்டு குடும்பம் இல்லை. இது அவரவர் விருப்பத்தினை பொறுத்தது என்றாலும் அத்தாய்மார்கள் உடல் அளவிலும் மன அளவிலும் தன்னை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அவர்கள் தன்னை மன மகிழ்வோடு வைத்துக் கொள்ள தினம் வீட்டிலேயேவாது 20 நிமிட உடற்பயிற்சி செய்ய வேண்டும். சற்று வெளியே வந்து இயற்கையோடு இருக்க வேண்டும். கணவர் மற்றும் வீட்டில் இருக்கும் நபர்களுடன் இரவு உணவினை சேர்ந்து உண்ண வேண்டும். குழந்தையோடு சிறிது நேரம் சிரித்து விளையாடுங்கள்.

* மீன் உண்ணும் பழக்கம் உடையவர்கள் இந்த உணவினை நன்கு எடுத்துக் கொள்ளலாம்.

* மனைவியின் உடல் நலனுக்கு அக்கறை கொடுங்கள். மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டால் கணவன் உடல் நலம் பாதிக்கப்படுகின்றது.

* ஓம் என காலையில் சில முறை சொல்வது சைனஸ் பகுதிகளை அடைப்பின்றி வைக்கும்.

* இடுப்புக்கு கீழே சாதாரன நீரில் சிறிது நேரம் இருப்பது வலிக்கும் சதைகளின் வலியை நீக்கும்.

* குறைந்தது ஆறு மணி நேரமாவது தூங்குங்கள்.

* உடலை உறுதியாய் வைத்திருங்கள். அதற்காக எலும்பும் தோலுமாக இருக்க வேண்டும் என்பதில்லை.

* அதிக வெள்ளைப் பொருட்களை தவிர்ப்பது நல்லது என்று பரிந்துரைக்கின்றனர். அரிசி, மாவு, சர்க்கரை இவற்றினை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.

* ப்ரோக்கோலி எனப்படும் பச்சை காலிபிளவர் கல்லீரலை சுத்தம் செய்ய வல்லது.

* 40 வயதினை கடந்தவர்கள் வைட்டமின் டி தேவையா என்பதினை அறிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

* சாப்பிட்டவுடன் ‘ஸ்வீட்’ வேண்டும் என்ற பழக்கத்தினை நீக்கி சிறிதளவு பழம் எடுத்துக் கொள்ளுங்கள்.

* இளைக்க வேண்டுமா? நன்கு தூங்குங்கள்.

* சிகப்பு அசைவத்தினை முடிந்தால் அடியோடு தவிர்த்து விடுங்கள். மிகப்பெரிய ஆபத்தினை இது உடலுக்கு ஏற்படுத்தலாம்.

* காலையில் 150 மி.லி. வெதுவெதுப்பான நீர் அருந்தலாம்.

* வெறும் வயிற்றில் கடின உடற்பயிற்சி செய்யாதீர்கள்.

* எப்பவும் சோகமாகவே இருக்காதீர்கள். இதுவே மிகப்பெரிய நோய்.

* நாள் ஒன்றுக்கு மூன்று முறை என்றில்லாமல் 5 முறை என்று உணவினை பிரித்து உண்ணுங்கள். இதில் பழங்கள், நீர், சாலட் என பிரித்துக் கொள்ளலாம்.

* 20 வயதிற்குப் பிறகு மருத்துவ ஆலோசனை படி உங்களுக்குத் தேவையான வைட்டமின்களை அவசியம் எடுத்துக் கொள்ளுங்கள்.

* பகல் உணவோ, இரவு உணவோ காய்கறி சாலட் உடன் ஆரம்பிக்க வேண்டும்.

* 10-15 நிமிடங்கள் வரை காலை அல்லது மாலை சூரிய ஒளி உடலில் பட வேண்டும்.

* செயற்கை பானங்கள் கண்டிப்பாக வேண்டாம்.

* ஆழ்ந்த மூச்சினை தினமும் 2-5 நிமிடங்கள் வரை இருமுறை செய்யுங்கள்.

* காலை அரிசி உணவு, மதியம் அரிசி உணவு, இரவு அரிசி உணவு என்று இல்லாமல் பல வகை உணவுகளை மாற்றி மாற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.

* இரவு 10 மணிக்கு தூங்கச் செல்வது தவறு.

* ‘நொறுங்க தின்றால் நூறு வயது’. உணவினை நிதானமாய் நன்கு மென்று உண்ணுங்கள்.

* இரவு படுக்கச் செல்லும் 2 மணி நேரத்திற்கு முன் இரவு உணவினை முடித்துக் கொள்ளுங்கள்.

* அவ்வப்போது உண்ணாவிரதம் இருங்கள்.

* பசிக்காமல் ஒரு போதும் சாப்பிடாதீர்கள்.

* கொஞ்சம் நல்ல நண்பர்களோடு பேசுங்கள்.

* நீச்சல் தெரியுமா? பழகிக் கொள்ளுங்கள். சிறந்த உடற்பயிற்சி. மன மகிழ்வும் தரும்.

* செருப்பு, ஷூ இவைகளை தரமானதாக வாங்குங்கள்.

* வசதி இருந்தால் அவ்வப்போது மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

* மனக்கவலை இருக்கும் பொழுது தூங்காதீர்கள். பாட்டு கேளுங்கள். புத்தகம் படியுங்கள்.

* அறிவுப்பூர்வமான சிந்தனை உடையவர்களிடம் பேச்சே வேண்டாம். உங்களை அது பாதிக்கும்.

* ஆரோக்கியம் உங்கள் வாழ்வின் உரிமை என உணருங்கள்.

Monday, December 19, 2016

Quantam கோட்பாடு

குவாண்டம் கோட்பாடு

நம்மை எவரேனும் கவனித்துக் கொண்டு இருக்கிறார் என வைத்துக் கொள்வோம், அப்போது நமது செயல்பாடு எப்படி இருக்கும்? அதே வேளையில் நம்மை எவரும் கவனிக்கவில்லை என வைத்துக் கொள்வோம் நமது செயல்பாடு எப்படி இருக்கும்?

இப்போது ஒரு ஒழுங்குமுறை எதில் இருக்கும்? எவரேனும் கவனித்துக் கொண்டு/ பார்த்துக் கொண்டு இருந்தால் மட்டுமே அதில் பெரும்பாலானவர்களில் ஒழுங்குமுறை இருக்கும், இல்லையெனில் தறிகெட்டுதான் திரிவார்கள். உதாரணத்திற்கு சாலைகளில் கேமரா பொருத்தி இருப்பார்கள். அந்த சாலையில் அதிக வேகம் இவ்வளவுதான் செல்லலாம் என இருக்கும். பெரும்பாலான காரோட்டிகள் இந்த கேமரா அருகில் வரும்போது மட்டும் குறிப்பிட்ட வேகத்தில் செல்வார்கள், அதற்கு பின்னர் அவர்களின் இஷ்டப்படிதான். இது ஒரு உதாரணம். இதைப்போலவே பல உதாரணங்கள் உண்டு. இதைத்தான் குவாண்டம் கோட்பாடு சொல்ல வருகிறது.

குவாண்டா என்றால் மிக மிக நுண்ணிய துகள்/அலை, அதாவது ஆற்றலின் ஒரு பகுதி என்றே கொள்ளலாம். இப்படிப்பட்ட பகுக்க முடியாத ஆற்றல் குறித்து விளக்கும் கோட்பாடுதான் குவாண்டம் கோட்பாடு. இப்போது குவாண்டம் கோட்பாடு பல்வேறு பரிமாணம் எடுத்துக் கொண்டு வருகிறது. அது குறித்து இப்போதைக்கு  தள்ளிப் போடுவோம்.

குவாண்டம் கோட்பாட்டில் ஐந்து விசயங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

1. ஆற்றலானது தொடர்ச்சியாக இல்லாமல், சிறிது சிறிதாக அதுவும் வெவேறான நிலையில் இருக்கும்.

நமது மீது பாயும் ஒளியானது தொடர்ந்து வந்து விழுந்தாலும் அவை ஒரு பகுதி பகுதியாகவே வரும். அதைத்தான் போட்டான் என குறிப்பிடுகிறார்கள். குவாண்டா அந்த போட்டானின் ஒரு சிறு பகுதி. ஒரு படம் எப்படி புள்ளிகள் இணைந்து உருவாகிறதோ அதைப் போலவே இந்த ஆற்றல் புள்ளிகளாக இருக்கிறது. இது எப்படி சாத்தியம் எனில் ஒரு அணுவில் வெளி ஆர்பிட்டலில் இருக்கும் எலக்ட்ரான்கள் வெவ்வேறு ஆற்றல் நிலை கொண்டு இருக்கின்றன என கண்டறியப்பட்டு இருக்கிறது. அதோடு மட்டுமில்லாது  அவை ஓரிடத்தில் நில்லாமல் மேலும் கீழும் குதித்துக் கொண்டு இருக்கிறது. அதன் காரணமாகவே நாம் பல்வேறு வண்ணங்கள் காண முடிகிறது.

2. அடிப்படைத் துகள்கள், இரட்டைத்தன்மை கொண்டது, அதாவது அலைகளாகவும், துகள்களாகவும் செயல்படும்.

இதற்கு ஒரு செயல்முறை பயிற்சி செய்தார்கள். தற்போதைய காலகட்டத்தில் எல்கட்ரானை துல்லியமாக கண்டறியும் கருவி நம்மிடம் இல்லை. அதனால்  நியூட்ரான் கொண்டு செயல்முறை செய்து பார்த்தார்கள்.

ஒரு அறை. அந்த அறையின் மத்தியில் இரண்டு துவாரங்கள் உள்ள சுவர். அந்த பக்கம் மணல் மூடை, இந்த பக்கம் ஒரு துப்பாக்கியுடன் உள்ள நபர். இப்போது ஒரு துவாரம் மூடப்படுகிறது. சுவருக்கு அருகில் இருந்து சுடும் போது திறக்கப்பட்ட துவாரத்தின் வழியின் மத்தியில் பல குண்டுகள் செல்லும். கணிப்பு மிகவும் துல்லியம். சற்று தள்ளி சென்று சுடும்போது அனைத்தும்  துவாரத்தின் மத்தியில் செல்ல வாய்ப்பு இல்லை. இப்போது மறு துவாரம் மூடப்படுகிறது. மூடப்பட்ட துவாரம் திறக்கப்படுகிறது. அதே விடை கிடைக்கிறது. ஏனெனில் இருப்பது ஒரு திறந்த துவாரம் மட்டுமே. இப்போது இரண்டு துவாரங்களை திறப்போம். முன்னர் மாதிரி சில குண்டுகள் இரண்டு துவாரங்கள் மத்தியில் செல்லும், ஒரு குண்டு ஒரு துவாரத்தில் மட்டுமே செல்லும். ஏனெனில் இந்த குண்டுகள் பருமப் பொருள் மட்டுமே எனவே ஒரே நிலைதான். இப்போது இந்த செயல்முறை பயிற்சியில் முக்கியமானது எந்த குண்டும் துவாரத்தைத் தவிர மற்ற இடத்தில் பட்டு திரும்பாது எனும் ஒரு கட்டுப்பாடு.

அதைப் போன்றே அலைகள் இப்போது செலுத்தப்படுகிறது. ஒரு துவாரம் மூடப்படுகிறது. எப்படி குண்டுகள் சென்றதோ அதைப் போன்றே அலைகள் செல்கிறது. மறு துவாரம் மூடி, மூடப்பட்ட துவாரம் திறக்கபடுகிறது, மீண்டும் அதே போன்ற முடிவு. இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இப்போது இரண்டு துவாரங்கள் திறக்கப்படுகிறது. இப்போது முதலில் ஒரு துவாரம் திறக்கப்பட்டபோது இருந்த பதில் இல்லாமல், ஒரு அலை வடிவம் தென்படுகிறது. இப்போது அலையின் உயரம் அதிகமாக தென்படுகிறது. இதற்கு காரணம், இரண்டு துவாரங்கள் வழியாக சென்ற அலைகள் இணைந்து ஒரு பெரிய அலையை உருவாக்கிவிட்டது. அதற்கு பின்னர் சின்ன அலை. சில இடங்களில் அலைகள் சேர்ந்து பெரிதாகவும், சில இடங்களில் அலைகள் சேர்ந்து ஒன்றுமில்லாமலும் ஆகும்.

இந்த குண்டுகள், மற்றும் அலைகள் செயல்படும் விதத்தை அடிப்படைத் துகள்கள் ஒரு சேர செய்கின்றன என்பதுதான் குவாண்டம் கோட்பாடு. உதாரணத்திற்கு எலக்ட்ரான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எலக்ட்ரான்கள் எதிர்மறைத் தன்மை கொண்டவை. இப்போது ஒரு துவாரம் திறக்க இந்த எலக்ட்ரான்கள் குண்டுகள் போன்றும், அலைகள் போன்றும் எப்படி ஒரு துவாரம் திறந்து இருந்ததோ அதைப் போன்றே செயல்பட்டன. இரண்டு துவாரங்கள் திறந்தபோது இந்த எலக்ட்ரான்கள் அலைகள் போன்றே செயல்பட்டன. ஒவ்வொரு எலக்ட்ரானும் மோதிக் கொள்வதால் இருக்கும் என்றே ஒரு ஒரு எலக்ட்ரான் மட்டும் செல்லுமாறு செயல்முறை செய்யப்பட்டது. அப்போதும் அவை அலைகள் போன்றே செயல்பட்டன. இதை கண்டறிய ஒளியை பயன்படுத்தினார்கள்.

ஒரு எலக்ட்ரான் செல்லும்போது இந்த ஒளியினால் வெளிச்சம் தரும். எனவே எலக்ட்ரான்கள் எந்த வழியில் செல்கிறது என கண்டறிய முற்பட்டார்கள். சுவற்றின் பின்புறம் விளக்கு வைக்கப்பட்டது. எலக்ட்ரான் ஆச்சரியமூட்டும் வகையில் குண்டுகள் போன்றே ஒரே ஒரு துவாரத்தில் சென்றன. இதற்கு என்ன காரணம் என அறிய முற்பட்டபோது ஒளியின் இடையூறு என அறிந்து கொள்ள முடிந்தது. இதனால் ஒளியின் தன்மையை குறைத்தார்கள். ஆற்றல் பகுதி பகுதியாய் வருவது என குறிப்பிட்டு இருந்தோம். இப்போது எலக்ட்ரான்கள் ஒளியின் தன்மை குறைந்ததால் ஒளியானது எலக்ட்ரானில் படும்போது குண்டுகள் போன்றும், ஒளியில் இருந்து தப்பிக்கும் எலக்ட்ரான்கள் அலைகள் போன்றும் செயல்பட்டன. முதலில் எழுதிய பத்தியை திருப்பி வாசியுங்கள். நம்மை கவனிக்கும்போது நமது செயல்பாடு, நம்மை கவனிக்காமல் இருக்கும்போது நமது செயல்பாடு!

தற்போது ஒளியின் வேகத்தை (சீரான அளவு எனினும்) குறைத்தார்கள். அதாவது ஒளியலையின் நீளம் அதிகரிக்கப்பட்டது. இப்போது ஓரளவு ஒளியலை நீளம் குறைக்கப்பட்டபோது குண்டுகள் போன்றும், மேலும் ஒளியலை நீளம் குறைக்கப்பட்ட போது அலைகள் போன்று செயல்பட்டது. இந்த செயல்முறை பயிற்சி சொன்னது இதுதான். எதைக் கண்டறிய வேண்டுமோ அதற்குரிய செயல்முறை பயிற்சி இல்லாமல் ஒன்றை சொல்ல முடியாது. நாம் செய்யும் செயல்முறை பயிற்சி குறித்தே ஒன்று இருப்பது, இல்லாதது தெரியும்.

இப்போது ஜீவாத்மா, பரமாத்மா. இதற்குரிய செயல்முறை பயிற்சி யோகம் என்றும், தியானம் என்றும் சொல்கிறார்கள். பரமாத்மா, ஜீவாத்மாவாக வந்ததாக புராணங்கள் குறிப்பிடுகிறது. விஸ்வரூப தரிசனம் என்றெல்லாம் சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு அணுத்துகள் எப்படி துகளாகவும், அலையாகவும் செயல்படும் என குவாண்டம் கோட்பாடு சொல்கிறதோ அதைப்போலவே ஆத்மா ஜீவாத்மா, பரமாத்மா என செயல்படும் என மெஞ்ஞானம் சொல்கிறது. குவாண்டத்தின் இந்த முக்கிய கோட்பாட்டை மறுப்பவர்கள் கடவுளை தாராளமாக மறுக்கலாம்.

''If you want to say that something behaves a certain way or even exists, you must give the context of this behaviour or existence since in another context it may behave differently or not exist at all''யோகிகளின், மகான்களின் மனநிலைக்கு கடவுள் தெரிந்து இருக்கலாம். அதைத்தான் அவர்கள் சொன்னார்கள். நாம் நமது நிலையில் இருந்து கொண்டு கடவுள் இல்லை என சொன்னால் அது நமது நிலைக்கு சரியாகவே இருக்கும்.

3. இந்த அடிப்படைத் துகள்கள் ஒழுங்குமுறையின்றி செல்லும் தன்மை கொண்டது.

4. ஒரு துகளின் உத்வேகத்தையும், அந்த உத்வேகத்தில் இருக்கும்போது உள்ள நிலையினையும் கண்டறிந்து கொள்வது என்பது முடியவே முடியாத ஒன்று. கருவிகள் இல்லாதபட்சத்தில் அதாவது ஓடிக்கொண்டிருப்பவர் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் எவ்வளவு வேகமாக ஓடினார் என அறிந்து கொள்வது சிரமம். இவை இரண்டில் ஒன்றை துல்லியமாக அறிந்து கொள்ள நினைத்தால் மற்றொன்று பிழைத்துப் போகும். ''இக்கணத்தில் எக்கணமும் இல்லை''

5. நாம் இப்போது கண்டு கொண்டு இருக்கும் உலகமும், அணுக்களின் உலகமும் முற்றிலும் வெவ்வேறானவை.

எப்போது ஒரு துகள் துகளாகவும், அலையாகவும் இருக்கும். ஆச்சரியப்படாதீர்கள். எப்போது துகளாக பார்க்கிறோமோ அப்போது துகளாக இருக்கும், எப்போது அலையாக பார்க்கிறோமோ அப்போது அலையாக இருக்கும். நாம் பார்க்கும் முறையை பொருத்தது என்றார் ஒரு அறிஞர். ஒன்றை பார்க்காதவரை அது உண்மை இல்லை என்றார் அவர். எனக்கு  பல நேரங்களில் அறிவியலாளர்கள் முட்டாள்கள் போன்றே காட்சி அளிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத்தான் தெரியும் உண்மை என்னவென்று.

ஒரு நாயை கல்லில் சிலை வடித்த கதை, நமது கிராமங்களில் மிகவும் பிரபல்யம். கல்லில் வடிக்கப்பட்ட சிலை கண்டு, இது கல்லோ, நாயோ என்றே எண்ணி, கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என பாடி வைத்தார்கள். கடவுளுக்கு என இது தெய்வம் என்றால் தெய்வம், சிலை என்றால் அது சிலைதான் என எழுதி வைத்தார்கள். ஆனால் உண்மை எது? ஒரு கல், அது சிலை. இப்போது நாயும், தெய்வமும் நாம் பார்ப்பதில் இருக்கிறது. அடிப்படையில் துகள்கள் துகள்கள்தான். செயல்முறை பயிற்சியில் துகள்களைத்தானே துவாரங்கள் வழியாய் செலுத்தினாய் என்றே கேட்க வேண்டும் போல் இருக்கிறது!

குவாண்டம் கோட்பாடு எனக்கு மிக மிக சரியாகப் புரிந்துவிட்டது,  இன்னும் எனது முட்டாள்தனம் நிச்சயமாக சிறிது நாட்கள் பின்னர் தொடரத்தான் செய்யும்.

Saturday, December 17, 2016

Good foods for good health

Good foods for good health....

★[Foods That Resemble The Body Parts & They're Good For health]

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?

எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டுவிடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும்தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.

எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்துவிடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக்கொண்டே வருவதைப்போன்றது.

நேர்மறை எண்ணங்களுக்கும் அதேபோன்ற சக்தி உண்டு.

எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும்போது அதைப்போக்க எனக்கு உதவிய 10 விஷயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.

1. தியானம்

தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைநம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2. புன்னகை

கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

3. நண்பர்கள்

முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.

4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல்

சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.

5. குறைகூறாதீர்கள்

உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.

6. உதவுங்கள்

எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும்போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.

7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும்போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

8. பாடுங்கள்

உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.

9. நன்றி கூறுங்கள்

நன்றி கூறுவதைவிட சிறந்த நேர்மறை உணர்வு இருக்கமுடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.

10. நல்லதை படியுங்கள்

தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதேபோன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்துவரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.

எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது..

உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும்.
உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும்.
உங்கள் செயல்களை கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும்.
உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும்.
உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்.

- நன்றி நன்றி நன்றி .....

Sunday, December 4, 2016

இஞ்சு பயன்கள்/Ginger benefits

* இஞ்சித் துவையல் சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

* இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

* இஞ்சி டீ குடிக்க சளித் தொல்லை உண்டாகாது.

* காது சம்மந்தமாக எந்த நோயும் ஏற்படாமல் இருக்க இஞ்சிப் பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

* இஞ்சியை கீற்றுக்களாக நறுக்கி, தேனில் ஊறவைத்து நாள்தோறும் காலையில் 4 துண்டு மாலை 4 துண்டு சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும். இளமை தோற்றம் கொடுக்கும்.

* இஞ்சி தேன் கலவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பைல் சுரப்பை தூண்டி, வயிற்றில் தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும். இதனால் தொப்பை குறையும். நல்ல மாற்றத்தைக் காண தொடர்ந்து 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர வேண்டும். அதே சமயம் உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.

* இஞ்சி, சிவதை, சீந்தில், நிலவாகை, கொடிவேலி, கழற்சிக் கொடி, முடக்கத்தான் சமூலம், பூண்டு, சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றை வகைக்கு 35 கிராம் எடுத்து அரைத்து 500 மில்லி நெய்யில் கலக்கி காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு, வேளைக்கு ஒரு ஸ்பூன் அளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர, வாத நோய் குணமாகும்.

* நோயெதிர்ப்பு சக்தியின்றி இருப்பவர்கள், அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றினால் அவஸ்தைப்படுபவர்கள், இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைந்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கலாம்.

* தேன் கலந்த இஞ்சி சாறு புற்றுநோய் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். எப்படியெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.

* ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக நுரையீரலினுள் செல்லும் இரத்த நாளங்கள் நன்கு ரிலாக்ஸ் அடைந்து, இரத்த ஓட்டம் சீராகி, சுவாச பிரச்சனைகள் நீங்கும். இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ள Food poison வராது.

* நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகும். இஞ்சிக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணமும் உண்டு.

* இஞ்சிக்கு பெண்களின் கருப்பையில் ஏற்படும் புற்று நோயை வராமல் தடுக்கும் தன்மை உண்டு.

* மோருடன் இஞ்சி, சீரகம், சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

* இஞ்சிச் சாறில் சிறிதளவு வெல்லம் போட்டுக் குடித்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

* இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

* இஞ்சிச் சாறும் தேனும் கூட்டி அதிகாலையில் தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். இதய நோய்கள் தீரும்.

* நான்கு டீஸ்பூன் அளவுள்ள இஞ்சிச் சாறுடன் சிறிது உப்பு மற்றும் சில துளிகள் எலுமிச்சைச் சாறு மற்றும் தண்ணீர் சேர்த்தால் இஞ்சி ஜூஸ் ரெடி. இதைக் குடித்தால், மஞ்சள் காமாலை, ஆஸ்துமா, சளி போன்ற வியாதிகள் குணமாகும்.

* பக்கவாத நோய் ஏற்பட காரணமாக இருக்கும் ரத்த உறைதலை இஞ்சி தடுக்கிறது. அத்துடன் தினம் ஒரு சிறு நெல்லிக்கனி அளவு இஞ்சி உண்டால் இதயத்திற்கும் அது பாதுகாப்பு அளிக்கிறது.

* ஓமத்துடன் இஞ்சி வைத்து அரைத்து எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

* தொண்டைவலி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது இந்த இஞ்சி.

* இஞ்சி சாறில் ஆமணக்கெண்ணை கலந்து குடிக்க மலச்சிக்கல் தீரும்.

* குழந்தைகளுக்கு வரும் இருமலைக் கட்டுப்படுத்த பாலுடன், இஞ்சிச் சாற்றைக் கலந்து சூடு செய்தும் கொடுக்கலாம்.

* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட பித்தம் தீரும்.

* இஞ்சி, வலிப்பு நோயைக் கூட குணப்படுத்தும் என்று சமீப ஆய்வுகள் தெரிவிக்கிறது.

* காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

* பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

* இஞ்சியுடன் சிறிது ஓமம் வைத்து அரைத்து சிறிது தேன் கலந்து சாப்பிட புளியேப்பம் மாறிவிடும்.

* இஞ்சியில் இருந்து தயார் செய்யப்படும் காம்ஃபின், ஜின்ஜிபெரி, ஃபெளலாட்ரின் ஆகிய மருந்துப் பொருள்கள், உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியும் தரக்கூடியவை.

* இஞ்சித் துண்டை பல்வலி உள்ள இடத்தில் வைத்துத் தேய்த்தால் வலி மட்டுப்படும்.

* இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

* இஞ்சியை, தேனுடன் கலந்து தினமும் காலையில் சிறிதளவு உண்டு வர தொந்தி குறையும்.

* இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

* இஞ்சிச் சாறு ரத்தத்தை சுத்திகரிக்கும். இதனால் தோல் நோய் தீரும். மந்தம் போகும்.

* இஞ்சி சாறுக்கு தலைவலியை போக்கும் தன்மையும் உண்டு.

* இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

* இஞ்சிச் சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் சம அளவு கலந்து, வேளைக்கு 30 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால், இருமல் விரைவில் குணமாகும்.

* ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும்.

* இஞ்சிச் சாறு, தேன் இரண்டையும் சேர்த்து பாகு செய்து குங்குமப் பூ, ஏலக்காய், சாதிக்காய், கிராம்பு இவற்றை பொடி செய்து தூவி, கிளறி எடுத்து கண்ணாடி பாத்திரத்தில் வைத்துக்கொண்டு, தேவையானபோது 5 கிராம் எடுத்து சாப்பிட்டால் வயிற்று வலி, வாந்தி முதலியவை குணமடையும்.

* மூக்கில், ஓரிரு சொட்டுகள் இஞ்சிச் சாறு விட்டால் தலைவலி குணமாகிவிடும்.

* இஞ்சி ஜூஸை தினமும் அருந்துபவர்களுக்கு, நாக்கு மற்றும் தொண்டையில் புற்றுநோய் ஏற்படாது.

* அதிகாலை நேரத்தில் இஞ்சிச் சாறுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் பித்த மயக்கம் தீரும்.